spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!

பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!

-

- Advertisement -

ரெண்டாயிம் ரூபா எடுத்துட்டு போனா ஒரு கட்ட பைய நெரச்சிடுவோம்… இப்ப ஐயாயிரம் எடுத்துட்டு போனாலும் பத்த மாட்டிங்குதுங்க …பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்! நாள்தோறும் உயரும் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வால் இடிக்கும் மாதாந்திர பட்ஜெட்… விலைவாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இல்லத்தரசிகள் வலியுறுத்துகின்றனா்.பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதனால், பட்ஜெட்டுக்குள் மாதத்தை ஓட்ட முடியாத நெருக்கடி நிலைக்கு, நடுத்தர ஏழை எளிய வர்க்கத்தினர் தள்ளப்பட்டு இருக்கின்றனர். கடந்த வருடத்தை ஒப்பிடும் பொழுது, நடப்பாண்டில் பெரும்பாலான அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் விளைச்சல் குறைவு உள்ளிட்டவற்றால் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றன.

பொதுவான அத்யாவசிய பொருட்களில் முதன்மையான ஒன்றான அரிசி, ரகத்துக்கு ஏற்ற வகையில் மூட்டை ஒன்று 1200 முதல் 1400 வரை விற்று வந்த நிலையில், தற்பொழுது 1900 முதல் 2000 வரை விற்பனையாகி வருகிறது. பொதுவாக சாப்பாட்டு அரிசி கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்பொழுது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிரியாணி பிரியர்களை பீதிக்கு உள்ளாக்கும் வகையில், ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீரக சம்பா அரிசி, தற்போது 140 ரூபாய்க்கு விற்கபடுகிறது. ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!சமையலுக்கு தேவையான தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஒரு லிட்டர் 460 ரூபாய் வரை  விற்பனையாகிறது. தேங்காய் விலையும் தாறுமாறாக உயர்ந்து விற்பனையாகிறது. கொப்பரை தேங்காய் தட்டுப்பாடு மற்றும் இளநீருக்கு அதிகளவிலான தேங்காய் எடுப்பதன் காரணமாக, கொப்பைரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைந்ததனால் விலை தேங்காய் எண்ணை விலை உயர்ந்திருக்கின்றன.

we-r-hiring

பாமாயில் விலை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து இருக்கின்றது. பொட்டுக்கடலை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நூடுல்ஸின் விலை ரகத்துக்கு ஏற்ற வகையில் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது. அவுல் கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், வெள்ளம் ஒரு கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், நாட்டு சா்க்கரை ரகத்துக்கு ஏற்ற வகையில் கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. ஏலக்காய் கிலோ 2000லிருந்து 3000 ரூபாயாகவும், அன்னாசி பழ பூ 300 ரூபாயில் இருந்து 800 ரூபாய்க்கும், ஜாதி பத்திரி கிலோ 1500 ரூபாயிலிருந்து 2500க்கும், முந்திரி 700லிருந்து 850 ரூபாய்க்கும், பாதாம் 800ல் இருந்து 900 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.

உணவு பொருட்களில் முக்கியமான ஒரு கிலோ புளி 100 முதல் 150 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ற வகையில் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. ஒரு கிலோ இஞ்சி 40 ரூபாயிலிருந்து அறுபது ரூபாயாகவும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், பெரிய வெங்காயம் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், பூண்டு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 140 முதல் 160 வரை விற்பனையாகி வருகிறது. தக்காளி காய் வகைகள் கீரை வகைகளும் அவ்வப்போது ஏற்படும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விலை உயர்ந்தும் பின்பு குறைந்தும் நிலையற்ற விலைத்தன்மையில் விற்பனையாகி வருகிறது.பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் மற்றும் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் போன்ற எண்ணெய், மிளகாய் மீல் மேக்கர் சோயாபீன்ஸ், சிறுதானிய வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் சந்தைவரத்துக்கு ஏற்ப, அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக அத்தியாவசிய பொருட்கள் விலை பெரும்பாலும் உயர்ந்தே காணப்படுகின்றது. இதனால் நடுத்தர ஏழை எளிய வர்க்கத்தினர் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் குடும்பத்தை நகர்த்த முடியவில்லை என தெரிவித்திருக்கின்றனர். 2000 ரூபாய் எடுத்துச் சென்றால் ஒரு சிறு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கும் நிலை தற்பொழுது மாறி, 5000 ரூபாய் எடுத்துச் சென்றாலும் போதாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். மாத சம்பளத்திற்கு நகர்ப்புறத்தில் வாழும் நடுத்தர ஏழை எளிய வர்கத்தினர், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் நெருக்கடிக்கு தள்ளப்படுவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். போக்குவரத்தின் அடிப்படையிலும், உற்பத்தியின் அடிப்படையிலும் விலை ஏற்றம் அமைவதனால், பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலை குறைக்கும்போது, பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்பது எதார்த்தமாக இருக்கின்றன. ஊதியம் உயராத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதனால், பட்ஜெட்டில் பரிதவிப்போருக்கு பாதகங்களை நீக்கி சாதகமான நகர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!

MUST READ