Homeசெய்திகள்தமிழ்நாடுவாங்கிய கடனுக்காக 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்? - போலீசார் தீவிர விசாரணை

வாங்கிய கடனுக்காக 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்? – போலீசார் தீவிர விசாரணை

-

திருச்சி அரியமங்கலம் அருகே வாங்கிய கடனுக்காக ஒரு பெண் இரண்டு மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்த மதியழகன் என்பவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மாலதி குடும்ப சூழ்நிலை காரணமாக பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாமி உமாராணி என்பவரிடமும் மாலதி கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உமாராணியிடன் மாலதி 6 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கொடுத்த கடனை உமாராணி திருப்பி கேட்ட நிலையில், மாலதியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உமாராணி மாலதியை தனது வீட்டில் உள்ள தனி அறையில் கடந்த 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உமாராணியின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். அப்போது போலீசாரை பார்த்த மாலதி, தன்னை காப்பாற்றிய போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தார். இது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உமாராணியை அழைத்து சென்ற போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலதி பலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காததால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவரது பாதுகாப்பு கருதி தனது வீட்டில் தங்க வைத்ததாகவும் உமாராணி தெரிவித்துள்ளார்.

MUST READ