Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கும்மாளம் போடும் பணியாளர்கள்.......வைரலாகும் வீடியோ!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கும்மாளம் போடும் பணியாளர்கள்…….வைரலாகும் வீடியோ!

-

 

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கும்மாளம் போடும் பணியாளர்கள்.......வைரலாக வீடியோ!

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில். உலகளவில் பிரசித்திப் பெற்ற கோயிலாக திகழ்கிறது திருவேற்காடு கருமாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர்.

“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு வருகைத் தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலின் தலைவராக வளர்மதி உள்ளார். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கருமாரியம்மன் புகைப்படத்திற்கு அருகில் இருக்கையில் அமர்ந்தவாறு இருக்கும் கோயில் தலைவர் வளர்மதியிடம் கோயிலில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை ஒப்படைப்பது போன்று நடனமாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

இந்த காணொளி குறித்து இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ