spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

-

- Advertisement -

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

டிஎன்பிஸ்சி சார்பில் நடந்த 6 சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வை 2,370 பேர் நேற்று எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

we-r-hiring

சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுன் 26ம் தேதி அறிவித்தது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்க 2,370 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளர் உதவியாளர் பணிக்கு நேற்று தேர்வுகள் நடந்தது. இன்றும் தேர்வு நடைபெற உள்ளது. நேற்று நடந்த தேர்வில் முதுகலை பட்டத்துக்கு தரநிலையில் கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களின் அடிப்படையிலான முதல் நாள், 2வது நாளில் தமிழ் தகுதி மற்றும் பொது ஆய்வுகள் அடிப்படையிலான 2ம் தாள் என இரண்டு எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

இந்த தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது. சென்னையில் 3 மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

MUST READ