spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி... பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி… பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

-

- Advertisement -

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

we-r-hiring

வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத் துறையினர் அரியூர் மலைக்கோடி பகுதிக்கு சென்று, சோதனை நடத்தினர். அப்போது, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி சரத்குமார் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, யானை தந்தம் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

MUST READ