கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்துள்ள போலீசார்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பாலாறு பகுதியை ஒட்டியுள்ள கண்மாய்களில் எந்நேரமும் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்க்கு தொடர் புகார் அளித்ததை அடுத்து அப்பகுதியில் இன்று காலை எஸ்பி-ன் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்குள்ள அய்யா கண்மாயில் அரசு அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி வாகனம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும விஜயகுமார் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.