Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் சான்று Umagine TN 2025 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் சான்று Umagine TN 2025 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

-

- Advertisement -

டிஜிட்டல் குற்றங்களும் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்கப்பதற்கான தொழில்நுட்பங்களை வடிவமைத்து வலுப்படுத்தப்படவேண்டும் என்று Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் சான்று Umagine TN 2025 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Umagine TN 2025’ மூன்றாவது முன்னணித் தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த மாநாட்டின் சிறப்பம்சம் தொழில்துறை சார்ந்த கல்வியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்களை ஒரு கூரையின்கீழ் ஒருங்கிணைக்கவும், துடிப்பான தளமாக செயல்பட்டு வருவதுதான் என்றார்.

AI தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் பேசப்படுகின்ற ‘Next Big Thing’! என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பலமுறை சொல்லியிருக்கிறார், “AI, Machine Learning இதனால் எல்லாம் வேலைவாய்ப்புகள் குறையாது. மேலும், வேலைவாய்ப்புகள் பெருகத்தான் செய்யும் என்று தெளிவாக அமைச்சர் பேசியிருப்பதாக தெரிவித்தார்.

இந்த மாநாடு தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல, இது தொலைநோக்கு கொண்ட மாநாடு, தமிழ்நாட்டின் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு என்றும் அனைத்துத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்று வழிகாட்டுகின்ற மாநாடு என்றார்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, Block Chain, இணையக் கருவிகள் (IOT), மின் வாகன உற்பத்தி மற்றும் வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, ஆட்சிக்கு வந்ததிலிருந்து, G.C.C. எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். ஆனால், என்னதான் முன்னணியில் இருந்தாலும், ‘இதுவே போதும்’ என்று நான் நினைக்க மாட்டேன். இன்னும், கூடுதலான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்லவேண்டும் என்று தான் நினைப்பேன் என்றார்.

1999-ஆம் ஆண்டு, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சென்னையில் டைடல் பூங்காவை உருவாக்கினார். இன்றைக்கு நாம் அடுத்தகட்டத்திற்குப் சென்று கொண்டு இருப்பதாகவும், கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஓசூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி என்று இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்ட நகரங்களில் கூட எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்களும், சிறு தொழில்நுட்பப் பூங்காக்களும் நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், வளர்ச்சி தலைநகரத்தில் மட்டுமே குவியக் கூடாது. உண்மையான வளர்ச்சி என்றால் அது சமச்சீரானதாக, பரந்துவிரிந்ததாக இருக்க வேண்டும்.

இதனால்தான், சென்னை மட்டுமல்லாமல், மற்ற நகரங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் பகுதிகளிலேயே வேலைவாய்ப்புகளுக்கான மாபெரும் உந்துசக்தியை நாம் உருவாக்கி வழங்கிக் கொண்டு வருகிறோம். இந்த வரிசையில், AI-க்காக கோவையில் ‘Public Private Partnership’ முறையில் 2 மில்லியன் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’-யை நிறுவப் போகிறோம் என்று தெரிவித்தார்.

இது ஒரு பக்கம் என்றால், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கவும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கொண்டு வருகிறோம். தமிழ்க் கணிப்பொறிக்கான டிஜிட்டல் வடிவங்களைத் தரப்படுத்தும் யுனிகோட் கன்சார்ட்டியத்தில் நிறுவன உறுப்பினர் நிலையில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் விளங்குகிறது.

Internet-இல் தமிழ் மொழி குறித்த பொருண்மைகளை மேம்படுத்த உதவவேண்டும் என்று பிழைதிருத்தி, கிராமர் அனலைசர், உரை திருத்தி போன்ற நிறைய மென்பொருள்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியிருக்கிறது. தமிழ்ப் பொருண்மைகள் அடிப்படையில், AI தொடர்பான முயற்சிகளுக்கு NLP கருவிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் செய்தால் மட்டும் போதுமா? இல்லை! அதனால்தான், Cyber Security-க்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இதற்காக, 2024-ஆம் ஆண்டில் ‘Cyber Security Policy 2.0’-வை வெளியிட்டோம்.

MSME-களுக்கான Cyber Security தொழில்நுட்ப உதவிப் பிரிவையும் ஏற்படுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும், மின்-ஆளுமையை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு இ-சேவைகளை வழங்கவும் தகவல் தொழில்நுட்பம் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது.

அரசின் அனைத்து சேவைகளும் Online-ல் வழங்கப்படவேண்டும். மக்களின் நேரமும், அலைச்சலும் மிச்சமாகவேண்டும். அந்த நோக்கத்தோடுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு இ-சேவை மையங்களின் அமைப்பு முறையை வலுப்படுத்தியிருக்கிறது.  2021-ஆம் ஆண்டில் 14,927-ஆக இருந்த இ-சேவை மையங்கள் 2024-ஆம் ஆண்டு முடிவில் 33,554 என்ற அளவுக்கு இரண்டு  மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.

இன்றைக்கு நாம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் தொடங்கி, மாதாமாதம் கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துகிறோம். அதற்கும் இந்த டேட்டாவும், தொழில்நுட்பமும்தான் காரணம். அப்படிதான்,1 கோடியே 28 இலட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 522 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. எது இல்லை என்றாலும் பரவாயில்லை, Internet அனைத்து இடங்களிலும் இருக்கவேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதற்காக தான், சென்னையில் இருக்கும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் இணைய வசதியை எளிதாக பயன்படுத்த 1,204 இலவச Wi-Fi Points நிறுவியிருக்கிறோம்.

இது DIGITAL யுகம்! இனி, மக்களுடைய அனைத்து பயன்பாடுமே Digital வழியாகதான் இருக்கும். இந்தப் பயன்பாடு Simple-ஆக அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.  அதேநேரத்தில், முறைகேடுகள் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களும் இருக்கவேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவும் அதே வேகத்தில், டிஜிட்டல் குற்றங்களும் பரவி வருகிறது. அவை தடுக்கப்படவேண்டும். அதற்கேற்ப, தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படவேண்டும், வலுப்படுத்தப்படவேண்டும் என்றார்.

ஐ.டி. மற்றும் புதுமைக்கான அடுத்த யுகத்தை நோக்கி, வளமான வாய்ப்புகளைக் கண்டறியவும், அறிவார்ந்த கருத்துகளைப் பரிமாறிக்கவும்,  கூட்டாண்மை நிறுவனங்களை உருவாக்கவும் இந்த மாநாட்டை இங்கு வந்திருக்கும் வல்லுநர்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒளிமயமான டிஜிட்டல் களத்தில் எதிர்காலத்தை நோக்கி நாட்டையும், உலகையும் வழி நடத்துவதற்கான நம்முடைய ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாக Umagine 2025 திகழட்டும் என்றார்.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை இன்று முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்

MUST READ