Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு திராவிட பூமி என்பதை தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது - வைகோ!

தமிழ்நாடு திராவிட பூமி என்பதை தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது – வைகோ!

-

- Advertisement -

காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்

தமிழ்நாடு திராவிட பூமி என்பதை தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை 8 மணியளவில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் திமுகவி சார்பில் 39 தொகுதிகளை கைப்பற்றப்பட்டது  மற்ற கட்சியினர் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக வைகோ அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை தேர்தல் மூலம் மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி, தமிழ்நாடு திராவிட பூமி என்பதை தேர்தல் நாட்டுக்கு உணர்த்தி உள்ளது. மோடி ஆட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்; பிரதமர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை மோடி இழந்துவிட்டார். பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

MUST READ