மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
இது குறித்து தே.மு.தி.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.