எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டிற்கு முன்பு நாங்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்ய தயாராக இருக்கிறோம் உங்கள் வீட்டிற்கு முன்பும் நாங்கள் உண்டியல் கொடுக்க தயாராக இருக்கிறோம் நீங்கள் நிதி கொடுங்கள் அப்பொழுது நீங்கள் தமிழரா இல்லையா என்பதை பார்த்துக் கொள்வோம் என இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினாா்.கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி சாா்பில் மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தில் நடைபெற்ற மேடையில், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ”எடப்பாடி பழனிச்சாமி கீழடி விவகாரத்தில் மௌனமாக இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வீட்டில் முன்பும் நிதி வசூல் செய்ய நாங்கள் வீட்டின் முன்பு உண்டியல் குலுக்குவோம் நீங்கள் காசு தருகிறீர்களா இல்லையா என்பதை பார்ப்போம். நீங்கள் தமிழரா இல்லையா என்பது அப்போது தெரிந்துவிடும். உண்மையான அரசாங்கமாக இருக்குமேயானால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அரசாங்கமாக இருக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேட்க தீர்மானங்களை நிறைவேற்றவில்லை என்றால் செவி கொடுத்து கேட்க வேண்டும்
ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்த வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். டெல்லியில் இருந்து வந்த அமைச்சர் ஒருவர் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு ஒரு கருத்தை தெரிவித்து விட்டு சென்று விட்டார். நாம் தற்பொழுது வெயிலில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றோம். மேலும் ஆய்வு செய்ய வேண்டும் தற்பொழுது உள்ள ஆய்வு கட்டுரையை ஏற்க முடியாது என எளிதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.விஞ்ஞானத்தை கேட்காத ஒரு அறிவியலை கேட்காத ஒரு ஆய்வை கேட்காத அமைப்பு ஆர் எஸ் எஸ் ஒரு பிற்போக்குத்தனமாக செயல்படக்கூடிய அமைப்புதான் அந்த அமைப்பு அந்த அமைப்பின் அரசு பிரிவு தான் பாஜக சொந்தமாக முடிவெடுக்க முடியாத அமைப்பு பாஜக சொந்தமாக பிரதமரை தேர்ந்தெடுக்காது சொந்தமாக கட்சி தலைவரை தேர்ந்தெடுக்காது. பாபர் மசூதியை பிடித்தவர் அத்வானி ஆர் எஸ் எஸ் தேவைப்பட்டால் எடுக்கப்பட்டார். மோடியும் ஒருநாள் தான் காணாமல் ஆக்கபடுவாா். கீழடி அகழ்வாய்வு ஆராய்ச்சி ஏற்க முடியாது என்பது நாம் ஒத்துமொத்த தமிழர்களை இயக்க முடியாது என்பதற்கு சமம்.
தமிழ்நாடு அரசு எப்படி கல்வி நிறுவனத்தை விதி ஒதுக்கி செயல்படுகிறது அது போல கீழடி அகழ்வாய்வு ஆராய்ச்சி 40 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். மக்களிடம் நிதி வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் சென்னை மாகாணம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க மக்களிடம் சென்று நிதி வசூல் செய்து 40 கோடி அல்லது 100 கோடி கூட தருவோம். இன்றிய அமைச்சர் டெல்லியில் இருந்து வந்து ஆட்சபனை தெரிவிப்பது எனக்கு புரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆட்சேபனை தெரிவிப்பது எனக்கு புரியவில்லை என்று பேசினாா்.
ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!