
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.

நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.10) சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மேல்முறையீடு செய்வதர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணி இன்று (நவ.09) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.