Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி

-

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி

இந்தோனேசியா தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூனுக்கு இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி: சோகத்தில் முடிந்த  திருமணம்

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செல்வம்- மல்லிகா அவர்களின் மகள் விபூஷ்னியா. பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம், குணச்சுந்தரி ஆகியோரின் மகன் மருத்துவரான லோகேஷ்வரனுக்கும் கடந்த 1 ஆம் தேதி பூவிருந்தவல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் இருவரும் இன்ப சுற்றுலாவிற்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர்.

தம்பதி

தீவில் விரைவு மோட்டர் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.பின்னர் காவல்துறையினர் உதவியுடன் விபூஷ்னியா உடல் உயிர் இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் உடன் சென்ற லோகேஷ்வரன் உடல் அடுத்த நாள் எடுக்கப்பட்டது. இன்பச் சுற்றுலா சென்ற காதல் தம்பதி உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலை அங்கிருந்து சென்னை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

MUST READ