ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு 109 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உகாண்டாவுக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ருவாண்டாவில் அண்மை காலங்களில் ஏற்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பாக இது பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் சேற்றுடன் கலந்து மழை வெள்ளம் பாய்ந்து ஓடியது. சில இடங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.
அதில் சிக்கி 109 பேர் மரணம் அடைந்து விட்டனர். மேலும் பலர் மண் சரிவிலும் வெள்ளப்பெருக்கிலும் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது.
உகாண்டா தலைநகர் ருகுங்கிரி கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலான ரூவாஸ் ஏற்பட்ட பெருமழைகால் 60 பேர் மரணம் அடைந்து விட்டனர். பெரும் ஒரு கோடியை 35 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஏழை நாடான அண்மைக்காலமாக இது போன்ற இயற்கை சீற்றங்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.