Homeசெய்திகள்உலகம்மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மெக்ஸிகோ நாட்டில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எகாடெபெக்கில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ, ஆலை முழுவதும் மளமளவென பரவியது. இதில், தொழிற்சாலையில் இருந்த டன் கணக்கிலான பிளாஸ்டிக் பொருட்கள் கருகின. ஏராளமான இயந்திரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

தொழிற்சாலையிலிருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்

தீ விபத்தால் அடர்த்தியான கரும்புகை வானில் சூழ்ந்தது. தீ விபத்தின்போது தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ