ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை அமைக்கும் பணியை முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மரக்கன்று நட்டு குத்து விளக்கேற்றி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட நியாய விலை கடை நீண்ட நாட்களாக சின்னம்மன் கோவில் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது இந்தக் கடையில் 1260 குடும்ப அட்டை தார்கள் பொருட்களை வாங்க இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசரிடம் அரசுக்கு சொந்தமான இடத்தில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் ரூ.13 லட்சம் 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை போட்டு பணியை துவக்கும் விழா நடைபெற்றது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கி அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான உடனடியான தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உள்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.