Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

-

- Advertisement -

சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்தனர். வாணியம்பாடியைச் சேர்ந்த ஜுனைத் அகமது என்பவர் தன்னிடம் வேலை செய்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கௌஸ் என்பவரை புதிதாக சி.டி. ஸ்கேன் மிஷின் ஒன்று வாங்கச் சொல்லியுள்ளார். அதை வாங்குவதற்காக ரூ. 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற முகமது கௌஸிடம் திருவல்லிகேணியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் சென்று மேலும் ரூ. 10 லட்சத்தை வாங்கிச் செல்லும்படி கூறியிருந்தார்.

சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!20 லட்ச ரூபாய் பணத்துடன் தனது பைக்கில் திருவல்லிக்கேணி சென்ற முகமது கௌஸை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிலையம் அருகே சீருடையில் நின்றுகொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பைக்கை மடக்கியுள்ளார்.அப்பொழுது சோதனையில் அவரிடம் கணக்கில் வராத பணம் இருப்பதை அறிந்த உதவி ஆய்வாளர், இது குறித்து மொபைல் போனில் தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த 3 நபர்கள் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி முகமது கௌஸை மிரட்டியதுடன் தங்களுடன் விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

எழும்பூர் அருகே சென்றபோது அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு பின்னர் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் செய்வதறியாமல் ஜுனைத் அகமதுக்கு போன் செய்து பின்னர் நடந்ததை கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதே காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராஜா சிங்-கிற்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டன.

பின்னர் ராஜா சிங்-கிடம் நடத்திய விசாரணையில் முகமது கௌஸ் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குள் சிக்கிய நபர் குறித்து காவல்நிலைய பதிவேட்டில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எப்படி ஒப்படைக்கலாம் என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே வேளையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய மூன்று பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிந்ததையடுத்து அவர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் உதவி ஆய்வாளர் ராஜா சிங், மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரும் கூட்டாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதில் முகமது கௌஸிடம் இருந்து பறிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் பணத்தை தலா ரூ. 5 லட்சமாக பிரித்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.மேலும், முகமது கௌஸ் திருவல்லிக்கேணி வருவது குறித்தும் அவரிடம் பணம் இருப்பது குறித்தும் இவர்களுக்கு தகவல் கொடுத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ