spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2.5 ஆண்டு டிமாண்டில் ராமதாஸ்! உருவாகும் மூன்றாவது அணி!

2.5 ஆண்டு டிமாண்டில் ராமதாஸ்! உருவாகும் மூன்றாவது அணி!

-

- Advertisement -

தவெக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவருகும் தலா 2.5 ஆண்டுகள் ஆட்சி, 50-50 சதவீத இடங்கள் என்று பேசப்படுகிறது என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக- பாஜக கூட்டணியின் இன்றைய சூழல் மற்றும் தவெகவின் கூட்டணி திட்டம் தொடர்பாக அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 48 சதவீத வாக்குகளை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக பிரிந்ததுதான். அதுதான் முக்கிய காரணமாகும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 45 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளை எடுப்பார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்திதான் நடைபெற்றது. திமுக, அதிமுகவின் தலைவர்களான கலைஞர், ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்கு பின்னர் இரு கட்சிகளிலும் சாதிய தாக்கங்கள் அதிகரித்துவிட்டது. இதை மறைக்கும் விதமாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக சாதிய ரீதியாக சென்றதால் தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.

இன்றைக்கு தெளிவான நிலைப்பாடு மற்றும் கூட்டணி பலத்தோடு உறுதியாக இருப்பது மு.க.ஸ்டாலின்தான். ஈரோடு கிழக்கு வேட்பாளர் பதவி ஏற்பில் எல்லோரும் ஒன்றாக நின்றார்கள். அந்த கூட்டணி தொடரும் என்பதில் இன்றைக்கும் உறுதியாக உள்ளேன். அதனால் அவர்களுக்கு 45 சதவீத வாக்குகள் இருக்கும். கூட்டணி இறுதியான பிறகுதான் திமுக எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதை கூற முடியும். திமுக கூட்டணிக்கான வாக்கு வங்கி என்பது அப்படியே உறுதியாக உள்ளது. அதற்கு எதிரான வாக்கு வங்கியைத் தான் எதிர்க்கட்சிகள் பிரித்துக்கொள்கிறார்கள். திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டாலோ, அல்லது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினாலோ அது பிரிக்கப்படும். தமிழ்நாட்டில் அதிகபட்ச அரசுக்கு எதிரான வாக்குகள் என்பது 6 சதவீதம் தான்.

1967 சட்டமன்றத் தேர்தலில் இந்தி எதிர்ப்பு போராட்டம்,மாணவர்கள் துப்பாக்கிச் சூடு, மிகப்பெரிய மாணவர்கள் எழுச்சி, அரிசிப் பஞ்சம், எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுடப்பட்டது. இப்படி எல்லா எதிர்ப்புகளும் சேர்ந்து அதிகபட்சமாக அரசுக்கு எதிராக 6 சதவீத வாக்குகள் பதிவாகியது. திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை இருந்தாலும் அது 5 சதவீதத்திற்கு உள்ளாகத்தான் இருக்கும். 1967ல் காமராஜருக்கு இருந்தது போன்றோ, கலைஞருக்கு தனிப்பட்ட முறையில் இருந்த எதிர்ப்பு போன்றோ ஸ்டாலினுக்கு கிடையாது. கலைஞருக்கு பாரம்பரியமாக சில எதிர்ப்புகள் எல்லாம் இருந்தன. அதை ஸ்டாலின் சரிகட்டிக் கொண்டுதான் செல்கிறார்.

அதிமுக -பாஜக கூட்டணி அமைந்துள்ளது. 19.5 சதவீத பாஜக – மோடி எதிர்ப்பு வாக்குகள் உள்ளே வந்திருக்கிறது. இந்த கூட்டணியில் பலத்தை நிரூபிக்காத விஜய்க்கு எத்தனை சீட்டுக்களை கொடுப்பீர்கள். தலைவா பட பிரச்சினை தொடர்பாக விஜய் கோவையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2014 தேர்தலில் சீமான் உதவியுடன் 39 சதவீதமாக இருந்த வாக்குகளை 45 சதவீதமாக உயர்ந்துவிட்டார். அப்போது விஜய்க்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்து விட்டார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தின்போது நோட்டாவுக்கு வாக்களிக்க சொன்னார். ஆனால் அதிகளவு வாக்குகள் பதிவாகியது. விக்ரவாண்டி தேர்தலில் விஜய் ஆதரவாளர்கள் வாக்களித்தார்களா? குறைந்தபட்சம் திமுகவுக்கு வாக்கு குறைந்திருக்க வேண்டும். அப்போது விக்கிரவாண்டி தேர்தலில் விஜயை, உதயநிதி லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிட்டார். 2026ல் வாக்குகளை நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்ள போகிறோம்.

த.வெ.க முதல் மாநாடு.... தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!

சீமான், எடப்பாடியை பலவீனப்படுத்தி வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார். ஸ்டாலின் கூட்டணி பலத்துடன் உறுதியாக உள்ளார். தற்போதைக்கு இந்த 2 தலைவர்கள் தான் உறுதியுடன் உள்ளனர். மற்றவர்கள் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக உள்ளனர். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் முடிவு எடுப்பதாக பிரேமலதா சொல்கிறார். ராமதாஸ் கடைசி நேரத்தில் தான் கூட்டணி தொடர்பாக முடிவுகளை எடுப்பார். அதனால் அங்கே செட்டில் ஆகி இருப்பது ஸ்டாலின், சீமான்தான். அரசியலுக்கு புதிதாக வந்த ரஜினி அதிக வாக்குகள் வாங்குவார் என்று நான் சொன்னது உண்மை.

காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் ரஜினிகாந்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். இவர்கள் வழியில் திருமாவளவனும் ரஜினியை ஏற்கத் தயாராக இருந்தார். பாஜக அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தது. ரஜினியை சிஎம் ஆக்க பலம் நிரூபித்த 5 பேர் தயாராக இருந்தனர்.  விஜய் மாநாட்டிற்கு பிறகு ஒரு சதவீதம் வாக்குகளை நிருபித்தவர்கள் கூட அவரை ஏற்கமாட்டார்கள் என்று சொன்னேன். இன்றைக்கு வரை அது உள்ளது. ஒருவேலை பாமக நிறுவனர் ராமதாஸ் 5 சதவீதம் வாக்குகளை நிருபித்தவர். அவர்  50க்கு – 50 என்று ஏற்றுக்கொண்டால் போய்விடலாம்.

விஜயை ஒரு சதவீத வாக்குகள் உள்ள முஸ்தபாவை தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை ராமதாஸ் 50-50 என ஒப்புக்கொண்டால் அந்த கருத்தில் மாற்றம் வந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வேன். விஜயும், அதிமுகவும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை அறிந்த பின்னர் தான் பாஜக அதிமுகவோடு கூட்டணி வைத்தது. ரஜினியை பிரைமரி போர்சாக இருந்து இவ்வளவு பேர் ஏற்க தயாராக இருந்தனர். ஆனால் விஜயை பிரைமரி போர்சாக முஸ்தபாவை தவிர யாரும் ஏற்க தயாராக இல்லை. கிருஷ்ணசாமி அரை சதவீத வாக்குகளை பெற்றவர் அவர் விஜயையும், என்.டி.ஏ கூட்டணியையும் 2 வாய்ப்புகளாக பார்க்கிறார். அப்போது விஜயை முதல்வர் வேட்பாளராக கிருஷ்ணசாமி ஏற்றுக்கொள்கிறார் என்று வைப்போம்.

நாளைக்கே ராமதாஸ் அய்யா 50-50 இடங்கள், ஆளுக்கு இரண்டரை வருட ஆட்சி என்ற முடிவுக்கு போகலாம். விஜயின் ஆடிட்டர் வெங்கட்ராமன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். பாமகவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் விஜயுடன் போனாலதான் சேலம், தருமபுரி தவிர மற்ற இடங்களில் வெற்றி வாய்ப்பு வரும். எடப்பாடியுடன் போனால் சேலம், தருமபுரியை தவிர வேறு எங்கும் வெற்றி பெற முடியாது. அதோடு விஜயோடு நின்று மும்முனை போட்டியாக போகலாம் என்று சி.ஆர்.பாஸ்கரன்  பேசுகிறார் என்று சொல்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ