குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடலூர் முதுநகர் காவல்நிலைய ஏட்டு சுதாகர் என்பவருக்கும், சண்முகம் என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனையை அன்னவள்ளி பஞ்சாயத்து துணை தலைவர் வைத்தியலிங்கம் தீர்த்து வைப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முதுநகர் காவல் நிலைய தலைமை காவலர் சுதாகர், பேச்சுவார்த்தை நடத்திய வைத்தியலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சென்றுள்ளார். பின்னர் அப்பகுதிக்கு வந்த முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை, வைத்தியலிங்கத்தை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இரவு 11 மணி வரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்.இது தொடர்பாக, கடலூர் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை அளிக்கவில்லை என்றும் பறிமுதல் செய்த வாகனத்தை திரும்ப வழங்கவில்லை என்றும் வைத்தியலிங்கம் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல் துறை அதிகாரிகள் மனித உரிமை மீறிலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட வைத்தியலிங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகை முதுநகர் காவல் ஆய்வாளர் ஏழுமலை, காவலர் சுதாகர் ஆகியோரிடம் இருந்து வசூலித்து கொள்ளவும் அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!