- Advertisement -
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. போர்கால கொள்முதலுக்கான விதிகளை செயல்படுத்துவது பற்றியும், கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும் என இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.