spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்… தமிழக அரசு

நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்… தமிழக அரசு

-

- Advertisement -

நாகையில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்…  தமிழக அரசுதகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள டைடல் பார்க் நிறுவனம் சார்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான (ஐ.டி.) உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்…  தமிழக அரசுகுறிப்பாக சிறிய நகரங்களில் மின் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட சிறிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், நாகையில் மின் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…

MUST READ