திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த இராஜாவூர் தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பயின்று வந்த நிலையில் இன்று கோடை விடுமுறை முடிந்து மற்றொரு பள்ளிக்கு செல்ல தனது பள்ளிக்கு டிசியை வாங்க வந்திருந்தனர்.
இப்போது நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் இந்திராவை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இதன் காரணமாக இந்திரா தலைமை ஆசிரியர்களும் கண்ணீர் விட்டு அழுதார். இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை நெகிழ செய்தது அதன் பின்னர் தலைமை ஆசிரியர் இந்திரா மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அடுத்த பள்ளியிலும் இங்கு பயின்றது போல் நன்றாக பயில வேண்டும் எனக் கூறி வழி அனுப்பி வைத்தார்…
சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் – தமிழ்நாடு அரசு