கல்லூரிகளை தமிழ்நாடு முழுக்க திறந்து உயர் கல்வி படிப்பை தாழ்த்தப்பட்டவனுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்று 2102 பேருக்கு மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மேடையில் ஆ.ராசா பேச்சினாா்.சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நகர் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.வி. பிரபாகரராஜா தலைமையில் 2102 பேருக்கு மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை கழக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, மருத்துவம் மற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினாா்கள்.
நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன்கல்வி உபகரணங்களையும் கல்விக்கான உதவித்தொகையை தருகிற நிகழ்வும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா அவருடைய சீரிய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர் அவர்கள் அடிக்கடி சொல்வது கல்வியும் மருத்துவமும் எனது இரண்டு கண்கள் புதுமை பெண்கள் தமிழ் புதல்வன் இந்த இரண்டு திட்டத்தை மட்டும் எட்டு லட்சம் மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் படிப்பதற்கு உண்டான கல்வி உதவி என்கின்ற வகையில் 41 லட்சம் மாணவர்கள் பயன்படுகிற வகையில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பேராசிரியர் பெயரால் பள்ளி கட்டிடங்களை இன்றைக்கு சீர்படுத்துவதற்கு 7500 கோடி ரூபாய் தந்த ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிட்டு ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி ரூபாய் இன்றைக்கு பள்ளி கட்டிடங்களை கட்டி தருவதற்கான நிதியாக தந்து இதுவரை பள்ளி கல்வி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான சாதனையை படித்துக் கொண்டிருக்கிறார். கல்வியை மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
ஆ ராசா மேடைப்பேச்சுஇந்தியாவுக்கே வழிகாட்டும் கல்வி துறையில் சேவை என்பது மாண்புமிகு முதல்வர் அவர்களால் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் விரும்பிய அந்த மாணவர்களுக்கான கல்வி சேவையை கல்வி தேவையை நம்முடைய முதல்வர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார். சிலருடைய பிறந்தநாள் மட்டும் தான் அவர்கள் பிறந்த கிராமத்தை எல்லையை தாண்டி அவர்கள் பிறந்த மாவட்ட எல்லையைத் தாண்டி அவர்கள் பிறந்த மாநிலத்தினுடைய எல்லையை தாண்டி உலகங்கள் கொண்டாடப்படுகிறது. அப்படி இரண்டு மூன்று பேர் பிறந்த நாள் தான் கொண்டாடப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள் அதில் டாக்டர் கலைஞர் அவர்கள் என்பதை இன்றைக்கு உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் கலைஞர் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
ஒரு ஐந்து வயது சிறுவன் நான் அன்றைக்கு என்னுடைய குடும்பத்திலே காங்கிரஸ் கட்சிக்காரர் தான் அதிகமாக இருப்பார்கள் ஆனால் நான் மட்டும் திராவிட முன்னேற்ற கழகத்தில் மத்திய அமைச்சராக துணை பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினராக எப்படி வந்தேன் என்றால் இந்த மாணவப் பருவத்தில் என்னுடைய மனக்குளத்தில் எறியப்பட்ட ஒரு கல் தான் காரணம் அந்த கல் கலைஞர் தான். கலைஞர் என்ற ஒரு மனிதனை படித்த காரணத்தினால் அண்ணாவைப் படித்து அண்ணாவைப் படித்ததால் பெரியாரைப் படித்தேன் பெரியாரைப் படித்ததால் அம்பேத்கரை படித்து அம்பேத்கரை படித்ததால் மார்க்சை படித்து இன்றைக்கு உங்கள் முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணை பொது செயலாளர் அதற்கு காரணம் இந்த மாணவப் பருவத்தில் என் மீது கலைஞர் என்ற மகத்தான மனிதரை விதைத்தவர் ஆசிரியர்தான்.
ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை மத்திய அமைச்சராக இருக்கிறேன் என்றால் கலைஞர் படியுங்கள் அண்ணாவை படியுங்கள் பெரியாரை படியுங்கள் நீங்களும் ராஜா. கல்லூரிகளை தமிழ்நாடு முழுக்க திறந்து மேல்நிலைப் படிப்பை தாழ்த்தப்பட்டவனுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக திறந்து வைத்தவர் கலைஞர். கலைஞரின் திட்டமில்லாமல் தமிழ்நாட்டில் ஒரு மனிதன் வாழவே முடியாது. வெளிநாட்டில் ஒரு பெண் என் கையை பிடித்துக் கொண்டு அண்ணா அப்பா முதலமைச்சருக்கு என்னுடைய வணக்கத்தை சொல்லுங்கள் நான் ஒரு மருத்துவர் பார்பர் சிகை அலங்காரம் மகள் நான் மெரிட்ல படிச்சிட்டு வந்துட்டேன் அதற்குக் காரணம் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாய் மகளிர் ஊக்கத்தொகை தான்.
கலைஞராக இருந்தாலும் அவருடைய பிள்ளையாக இருந்தாலும் பெரியாருடைய தத்துவத்தை கொள்கையை தாங்கி அந்த தமிழ்நாட்டுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான மனிதர்கள் அன்றைக்கு இருந்தார்கள் இன்றைக்கு அவர்கள் இல்லை அவர்களின் வடிவமாக இருக்கின்ற மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற இந்த மாமனிதர் நமக்கு அரணாக இருக்கிறார்.
கூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!