சென்னை பெரம்பூரில் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். கீழ்பாக்கம் காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த யாமினி. இவர் தன்னுடைய 10 வயதுடைய சிறுமி சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று யாமினி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி சம்பவ இடத்தில் 10 வயது சிறுமி நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -