- Advertisement -
கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 35,250 கன அடியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
மேலும் மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீாின் அளவு 30,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 7,500 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
