spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு

ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு

-

- Advertisement -

இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறியுள்ளாா்.ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்புதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு:-

ஆர்எஸ்எஸ் பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது பாஜக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நீதிபதி சுதர்சன ரெட்டி ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கான பல்வேறு விவகாரங்களில் நலன்சார்ந்து பல தீர்ப்பு வழங்கியிருக்கிறார் அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.

we-r-hiring

குடியரசு துணைத் தலைவர் தேர்வில் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இதுவே இறுதியானது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறினாா்.

நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு…முதற்கட்ட அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!

MUST READ