கல்கி 2898AD- 2 படத்திலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகிவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898AD’ திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பசுபதி, ஷோபனா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி போன்ற பல பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். நாக் அஸ்வின் இயக்கி இருந்த இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து கல்கி 2898AD- 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. பிரபாஸ் தனது கமிட்மெண்டுகளை முடித்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை தீபிகா படுகோன் ‘கல்கி 2898AD- 2’ படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் ‘கல்கி 2898AD- 2’ படத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறு யார் நடிக்கப் போகிறார்? என்பது தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.