- Advertisement -
மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து அவா் தனது எக்ஸ்தளப்பதிவில்,
- ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-ல் வெளுப்பது எப்படி?
- நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
- ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
- பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை SIRயை ஆதரிப்பது ஏன்?
- இரும்பின் தொன்மை குறித்து அறிவியல் பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம் வராதது ஏன்?
- கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
- இதற்கெல்லாம் பதில் வருமா?
- இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளாா்.