- Advertisement -
சென்னை மெப்ஸ் வளாகத்தை மேம்படுத்த நடவடிக்கை
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் வளாகத்தில் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு தொழில் நிறுவனங்களை அதிகரித்து பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் மெப்ஸ் என்னும் சென்னை சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மண்டலம் செயல்படுகிறது.

இங்க பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 75 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இங்கு நீல சட்டை பணியாளர்கள் எனப்படும் குறைந்த வருவாயில் பணியாற்றுபவர்களுக்கு மெப்ஸ் நிறுவனம் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெப்ஸ் மேம்பாட்டு அதிகாரி அலெக்ஸ் பால் மெப்ஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தப்படுவதற்கான திட்டம் குறித்து விளக்கினார்.
இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நாட்டின் வருவாயை இரு மடங்கு அதிகரிப்பதை இலக்காக வைத்து மெப்ஸ் தொழில் வளாகம் மேம்படுத்தப்படும் என்று அலெக்ஸ் பால் கூறியுள்ளார்.


