spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!!

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

-

- Advertisement -

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பயங்கரமான பசியெடுத்தது. செய்வதறியாமல், ஒரு மரத்தின் மேலே உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் சாப்பிட்டான்.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!!மிகக் கனிந்த பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றான். அப்போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்துவிட்டது. சட்டென்று சுதாரித்துக் கொண்ட அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு, கண்ணை மூடியவாறே தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.

உள்ளங்கை முழுவதுமாக வியர்த்து வழுக்க ஆரம்பித்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.  கல் பட்டவுடன் வலியில் அய்யோ என்றவாறு கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உங்களை உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசவில்லை. மீண்டும் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் அந்த இளைஞனுக்கு கோபம் வந்து, பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

we-r-hiring

பெரியவர் மீண்டும் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென கிளையிலிருந்து இறங்கி வந்தான். அவன் நேராகப் பெரியவரிடம்  சென்று, அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்வே இல்லை. நான் ஒரு கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

“பயம் தான் ஒருவரின் முதன்மையான எதிாி. அதனை நாம் வென்றுவிட்டால் வெற்றி கிட்டும்“

கனவு வீடு வாங்குவது உங்களது கனவா? அப்பொழுது உங்களுக்குத் தான் இந்த பதிவு…

MUST READ