முதலமைச்சருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அதாவது, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 நிறுவனங்களை சபரீசன் தொடங்கியுள்ளார். முறைகேடாக சுருட்டிய பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பு அமைதியாக இருந்த சூழலில், தான் பேசியதாக வெளியான ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என ஏற்கனவே பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.