‘புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்’ என சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால், மனித வளத் துறை ஒரு முறைப்படுத்தப்பட்ட துறையாக மாறும் என்று சி.ஐ.இ.எல் மனித வள நிறுவனத்தின் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களை மாற்றுமா?
AI குறித்த பயம் தேவையற்றது. பயிற்சி இல்லாதவர்களின் இடத்தை மட்டுமே AI அல்லது பயிற்சி பெற்றவர்கள் பிடிப்பார்கள். தற்போது ஐ.டி. நிறுவனங்களில் ஏற்படும் வேலைஇழப்புகள் தற்காலிகமானவைதான்; விரைவில் இந்த நிலை மாறும்.
கார்ப்பரேட் பதவிகளில் மனித வளத் துறையினர் (HR)
கார்ப்பரேட் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களில் 11% பேர் மனித வளத் துறையைச் சார்ந்தவர்கள். தற்போது இந்த நிலை மாறிவருகிறது. மார்க்கெட்டிங், நிதி, சட்டம் மற்றும் சிஸ்டம்ஸ் துறைகளுக்கு அடுத்தபடியாக மனித வளத் துறையினருக்கு உயர் பதவிகளில் முக்கியத்துவம் கிடைக்கிறது என்பது உண்மை. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும்.
அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகள்
மனித வளத் துறை சேவைகளுக்கு தற்போது 18% ஜி.எஸ்.டி. (GST) விதிக்கப்படுகிறது. இதை 5% ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், தமிழக அரசு ‘தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளராக’ (Qualified Institutional Investor) மாறி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் (4 Labour Codes)
புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் (4 Labour Codes)
மனித வளத் துறையில் பல தசாப்த கால அனுபவம் கொண்ட பாண்டியராஜன், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சட்ட மாற்றங்கள் வேலைவாய்ப்பு சந்தையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்தப் பேட்டியின் வாயிலாக முன்வைக்கிறார்.
