spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை

-

- Advertisement -

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

annamalai

கோவையில் நடைபெற்ற பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட தலைநகரங்களில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளச்சாரயம் பட்டிதொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் விழுப்புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மாநில அரசிற்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

we-r-hiring

வருகின்ற 21 ம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து, கள்ளச்சாரயத்திற்கு ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக குழுவினர் மனு அளிக்க உள்ளோம். டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடக்கூடிய மதுவிற்கும், கள்ளச்சாரயத்திற்கும் ஆளுநர் முற்றுபுள்ளி வைக்க மனு அளிக்க உள்ளோம். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். அவரை நீக்க கோரி முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது. அவரை நீக்க ஆளுநர் முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும்” என்றார்.

MUST READ