- Advertisement -
தேவையான பொருட்கள்;
மீல்மேக்கர் -1 கப்

வெங்காயம் -1
தக்காளி -3
இஞ்சி -சிறிதளவு
பூண்டு -10 பல்
சீரகம் -2ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1/2ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் -1/2 ஸ்பூன்
தேங்காய் பால் -1/2 கப்
வேக வைத்த பச்சை பட்டாணி-1/2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை;
- மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இஞ்சி ,பூண்டினை அரைத்து பேஸ்டாக வைத்துகொள்ள வேண்டும்.சீரகத்தை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் ,தக்காளியினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பிறகு வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
- பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் ,உப்பு சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது மீல்மேக்கரைப் போட்டு வதக்கவும்.
- பின்னர் வேகவைத்த பச்சை பட்டாணியை போட்டு நன்றாக கிளறி விடவும்.
- தேங்காய் பால் ஊற்றி வறுத்து வைத்த சீரகத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- இப்போது சுவையான மீல்மேக்கர் குழம்பு தயார்.சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் சப்பாத்தி,தோசைக்கும் ஏற்றது.
- குழந்தைகள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மீல்மேக்கரின் பயன்கள்;
- மெக்னீசியம் ,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
- எலும்பின் பலத்தை அதிகரிக்கிறது.
- மார்பக புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.