spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே அமைச்சர் பதவி இழப்பு

செந்தில் பாலாஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே அமைச்சர் பதவி இழப்பு

-

- Advertisement -

செந்தில் பாலாஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே அமைச்சர் பதவி இழப்பு

செந்தில் பாலாஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே அமைச்சர் பதவி இழக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநரின் ஒப்புதலை மீறி, அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கியதுடன் வி.செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

we-r-hiring

Highcourt

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் நாங்கள் அரசியலமைப்பு சட்டப்படியே செயல்பட முடியும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே பதவி இழப்பு ஏற்படும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். முதலமைச்சர் எழுதிய கடித நகலை சமர்பிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

MUST READ