spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

-

- Advertisement -

ஆவடியில் திமுக ஆட்சியை கண்டித்து காலி குடங்களுடன் முதல் முறையாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த ஏரியை சமப்படுத்தி 1993-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்புகளை உருவாக்கியது. 115 ஏக்கர் பரப்பளவில்  ஆறு பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு 3700 வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டது. வீடுகள் உருவாகி 30 ஆண்டுகள் முடியப்போகிறது. இப்போது அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராடுவது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானம்.

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

கடந்த 2010-ம் ஆண்டு 9.5 லட்சம் ரூபாய் செலவில் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த தொட்டி தற்போது பழையதாகிவிட்டது. அதை பழுது பார்க்க மீண்டும் லட்சக் கணக்கில் டெண்டர் வைப்பார்கள். ஆனால் தண்ணீர் மட்டும் வந்தப்பாடு இல்லை.

we-r-hiring

கழிவுநீர் கால்வாய்

ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் ஏ பிளாக். பி பிளாக் என்று சுமார் 4000 வீடுகள் உள்ளது. ஆவடி HVF, OCF குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் ஆவடி பேருந்து நிலையம் வழியாக ஹவுசிங் போர்டு குடியிருப்புகளை கடந்து பருத்திப்பட்டு ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லுகிறது. இந்த கால்வாய் வழி முழுவதையும் ஆவடியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஆக்ரமித்து வீடுகளும், வணிக வளாகங்களும் கட்டியுள்ளனர். அதனால் கால்வாயின் அளவு சுருங்கி போனதால் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் வெளியேறி மக்களை பாதிக்கிறது.

ஹவுசிங் போர்டு மக்கள் வெளியேற்றும் கழிவுநீரும் வெளியே செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஆக்ரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்தாலும் ஆட்சியாளர்கள் விடமாட்டார்கள்.

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

பட்டா வழங்குவதில் தாமதம்

ஹவுசிங் போர்டு குடியிருப்புகளுக்கு தனிப்பட்டா வழங்க கடந்த 2021ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வீட்டுவசதி வாரியத்திடம் உள்ள வீட்டுமனை ஒதுக்கீடு வரைபடத்தை வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வாரியத்தின் அதிகாரிகளையும், வருவாய்துறை அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் ஆட்சியாளர்கள் முதல் படிக்கூட எடுத்து வைக்கவில்லை.

ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் பொன்னு சூப்பர் மார்கெட்டிற்கு சொந்தமான காலி மனைக்கு மட்டும் (ஆதிபராசக்தி கோயில் எதிரில்) பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுமனை ஒதுக்கீடு செய்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை அந்தப்பகுதிக்கு பட்டா கிடைக்காததற்கு ஆட்சியாளர்களே காரணம்.

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

வீட்டுவசதி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை போடாத சாலைகளும் அப்பகுதியில் இருப்பது ஆட்சியாளர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. அதேபகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு வீட்டுவசதி வாரியம் 1.54 ஏக்கர் காலி நிலங்களை ஒதுக்கியது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தை தற்போது வீட்டுவசதி வாரியம் மனைகளாக பிரித்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மக்களின் சொத்தை சில அதிகாரிகள், அரசியல் வாதிகள் அபகரிக்க திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது.

குடிநீர் இல்லை, கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை, வீட்டுமனை பட்டா இல்லை என்று எதுவும் இல்லாத மக்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் குதிக்க தொடங்கியுள்ளனர். மேலும் எங்களை போராட்ட களத்திற்கு தள்ளாமல் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ