
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இத்தகைய அறிவிப்புக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவுச் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.