spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

-

- Advertisement -

 

காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!
File Photo

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் தபால் மறு வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பழனி நாடாரின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டது.

we-r-hiring

பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடாரும், அ.தி.மு.க. சார்பில் செல்வன் மோகன் தாஸும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணவும், அது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

நிலவில் லேண்டர் எப்போது தரையிறங்கும்?- விரிவாகப் பார்ப்போம்!

அதைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 14) காலை 08.00 மணிக்கு தபால் மறு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில், எம்.எல்.ஏ. பழனி நாடாரின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

MUST READ