2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்- சீமான்
விஜயலட்சுமியிடம் ரூ.60 லட்சம், நகைகள் எதுவும் நான் பெறவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சீமானுக்கு ஆதரவாக அவரது மனைவி கயல்விழி வழக்கறிஞராக காவல்நிலையத்திற்கு சென்றார். புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெறுவதாக கூறியுள்ள நிலையில், சீமானிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2 பெண்களாள் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் வன்கொடுமையை பேசுகிறவர்கள், ஆண்களுக்கு நிகழ்வும் வன்கொடுமையையும் பேசுங்கள். எனக்கு ஆதரவாக என் மனைவி கயல்விழி இருக்கிறார். நடிகை விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றதை தெரிவிப்பேன். நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு தொடர்பாக போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளேன். விஜயலட்சுமியிடம் ரூ.60 லட்சம், நகைகள் எதுவும் நான் பெறவில்லை” என்றார்.