
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 13- ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை நவம்பர் 12- ஆம் தேதி அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 13- ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் நவம்பர் 18- ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.