- Advertisement -
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று சென்னை விமான நிலையம் வரை மெட்ரோவில் பயணித்தார்.
மெட்ரோ ரயிலில், சக பயணிகளுடன் நிதியமைச்சர் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டே சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்தார் நிதி அமைச்சர்.

50 க்கும் மேற்பட்ட பயணிகள் செல்லும் மெட்ரோ ரயிலில் எந்த ஒரு பாதுகாப்புப் படையுமின்றி தமிழ் நாடு நிதியமைச்சர் சென்னை விமான நிலையம் வரை பயணம் செய்தார்.
மேலும், அந்த மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
