spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!

ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை கோவைக்கு செல்லவுள்ளனர்.

we-r-hiring

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஒப்புதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரும், முதலமைச்சரும் ஏன் அமர்ந்துப் பேசக் கூடாது என உச்சநீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சூழலில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை சென்னையில் இருந்து கோவைக்கு செல்லவுள்ளனர். இந்த பயணத்தின் போது, முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகிய இருவரும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைக்க நாளை (டிச.18) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை செல்லவுள்ளார். அதேபோல், நாமக்கல்லில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ