spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை உள்பட 12 பேர் மீது பாய்ந்த வழக்கு!

அண்ணாமலை உள்பட 12 பேர் மீது பாய்ந்த வழக்கு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடைப்பயணம் மேற்கொண்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.

we-r-hiring

ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்; அலைமோதிய மக்கள் கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அண்மையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். ஆம்பூர் புறவழிச்சாலை, ஆம்பூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பா.ஜ.க.வினர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடைப்பயணமாக நேதாஜி சாலை வழியாகச் சென்ற அவர், ஆம்பூர் நகர் காவல் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிலையில், அண்ணாமலையின் நடைப்பயணத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

‘கார் விபத்து’- சைதை துரைசாமி மகனின் நிலை என்ன?

இதன் அடிப்படையில், அனுமதியின்றிக் கூடுதல் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக நடைப்பயணம் சென்றது, வழிமறித்து கூட்டம் கூட்டியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.

MUST READ