
பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் இல்லாததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!
பின்னர், வீட்டில் பாதுகாப்பிற்காக இருந்த காவலர்களிடம் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு, அங்கிருந்து சென்றனர். அதில் ராஜேஷ் தாஸ் கடந்த ஒரு வாரமாக வீட்டில் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.