spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

-

- Advertisement -

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் குளத்தில் மூழ்கி உயிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த திரு.லெட்சுமணன் என்பவரது குழந்தைகள் செல்வி.சந்தியா (வயது 13), செல்வி, கிருஷ்ணவேணி (வயது 10) மற்றும் செல்வன். இசக்கிராஜா (வயது 8) ஆகிய மூவரும் நேற்று 09.03.2024 மாலை தனது உறவினருடன் பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ