- Advertisement -
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சுமார் 200-க்கும் அதிகமான இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி கட்சிகள் 100-க்கும் அதிகமான இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
