Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

-

- Advertisement -

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் ஊட்டி ஆகிய ரயில் நிலையங்களில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும்   சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக ரயில்வே போலீஸ் தலைமையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்பு  ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யபட்டு நடத்தபட்டுள்ளன.

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் பொது மக்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையத்தில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எழுதி வைக்கப்பட்ட பேனருக்கு  கீழே பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் இராயில்வே போலீஸரால் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிசேலத்தில் பள்ளி மாணவர்கள் 200 பேர் முன்னிலையில் போதை பொருளுக்கு எதிராக பேரணி மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ