1996-வது ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 11,12 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு அரச மரத்தடியில் சந்தித்தனர். அதே அரசமரத் தடியில் திருநின்றவூரில் கையில் கம்புடன் 80 வயது ஆசிரியர் வகுப்பு எடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.திருநின்றவூரில் செயல்படும் தனியார் பள்ளியில் 1996 முதல் 1998 வரை பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அதேபோல் வயதானா நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாணவர்கள் தங்கள் பழைய நண்பர்களை சந்தித்து, ஆரத் தழுவி பரஸ்பரம் தழுவிக் கொண்டனர். மேலும் தங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்த மாணவர்களுக்கு அரச மரத்தடியில் அமர்ந்து ஆசிரியர் வகுப்பெடுத்து நிகழ்ச்சி ஏற்படுத்தியது. அப்போது கையில் கம்புடன் சிறுவயதில் மாணவர்களுக்கு வழங்கி அறிவுரைகளை மீண்டும் போதித்தார்.
திராவிட மாடல் அரசு திட்டத்தை நாடே பின்பற்றுகிறது – முதல்வர் பெருமிதம்