தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டத்தை ’கொண்டு வந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர். பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்.
தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45வது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில் கூறியுள்ளாா்.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 45வது மடாதிபதியாக விளங்கிய தெய்வசிகாமணி அருணாசல தேசிக சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் என்றும் தந்தை பெரியாரால் குரு மகா சந்நிதானம் என்றும் போற்றப்பட்டவர். திருக்குறள் பேரவை ஏற்படுத்தியவர். தமிழ் மாமுனிவர் என்றும் அழைக்கப்பட்ட குன்றக்குடி அடிகளார் கூட்டுறவு மேலாண்மையால் குன்றக்குடி கிராமத்தை தன்னிறைவு அடையச் செய்தவர். இதனால் மத்திய அரசால் குன்றக்குடி மாடல் என்று அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றவர்.
மத நல்லிணக்கத்தை பேணியவர் குன்றக்குடி அடிகளார் 100 ஆண்டு விழாவை அரசு விழாவாக அறிவித்துள்ளது. இன்று 100 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காரைக்குடி தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு அரசு சார்பில் குன்றக்குடியில் உள்ள மணி மண்டபத்தில் அடிகளாரின் திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்பத்தூர் வட்டாச்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்று கூறினாா்.
கண்ணீரை வரவழக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்…சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு!
