spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதிருப்புகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல...

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் அசத்தல் பேச்சு

-

- Advertisement -

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் , அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த  அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகிறார் என்று அமைச்சர் சா.மு.நாசர் அசத்தலாக பேசினார்.

திருபுகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் - அமைச்சர் சா.மு.நாசர் அசத்தல் பேச்சு

we-r-hiring

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் நியாய விலை கடையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு கடையில் எடை போட்டு சர்க்கரை வினியோகம் செய்தார்.

அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் என்பது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகிறார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை 3 ரூபாயை குறைத்தன் விலைவாக நாள் ஒன்றுக்கு 85 லட்சம் ரூபாய் அரசு்கு இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் மக்களின் நலனின் காரணமாக விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.

மகளிர் தங்களது பயணத்தை மேற்கொள்ள கடந்த மாதம் வரை 520 கோடி முறை இலவச பயணத்தில் பயணம் செய்துள்ளனர். அதனால் 660 கோடி ரூபாய் வரை சுமை ஏற்பட்டாலும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் தமிழ்நாட்டின் முதல்வர் தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதனைத் தொடரந்து, இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமை பெண் திட்டம், மகளீர் உரிமைத் திட்டம் என்று எண்ணற்ற திட்டங்களை நடைமுறை படுத்தி செய்த வருபவர் நமது முதலமைச்சர் என்று அமைச்சர் சா.மு.நாசர் அசத்தலாக பேசினார்.

MUST READ