spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஇரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

-

- Advertisement -

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

we-r-hiring

ஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள், வயது-36. இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் மகன் உள்ளான்.

அவரது மகன் கார்த்திக், வயது-10 ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக் தாய் எமிலியம்மாள் உடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றான். எமிலியம்மாள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க,கார்த்திக் இரண்டாவது மாடியில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது,காற்றாடி ஒன்று பறந்து வந்து மரத்தில் சிக்கி கொண்டது. இதனை கண்ட கார்த்திக் காற்றாடியை எடுக்க முற்பட்டுள்ளான்.அப் போது திடீரென மாடியில் இருந்து தவறி கார்த்திக் கீழே விழுந்துள்ளான். கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் எமிலியம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தான். ஆவடி போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காத்தாடி பிடிக்க சென்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

MUST READ